
திருச்சியில் அமைக்கத் திட்டமிடப்பட்ட 100 கோடி மருத்துவமனைத் திட்டம் அரசியல் காரணங்களால் சேலத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. அதற்கு இணையான திட்டத்தை செப்டம்பர் 21-ம் தேதி திருச்சி வரும் முதல்வர் கலைஞர் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், செப்டம்பர் 25-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்துக்கு எதிரே மொட்டையடித்து அரை நிர்வாணப் போராட்டம் நடத்துவோம்; மேலும், தேர்தலில் மத்திய, மாநில ஆளும் கட்சிகளுக்கு எதிராகப் பிரசாரம் நடத்துவோம் என்றும் அறிவித்திருக்கும் இந்தக் கூட்டமைப்பில் 149 மக்கள் அமைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக