இலங்கை கிளிநொச்சி பகுதியில் தீவிர சண்டை நடைபெற்றுவருவதால், அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு அந்நாட்டின் அதிபர் ராஜபக்ஷே வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளின் தலைமையிடமான கிளிநொச்சியைக் கைப்பற்றும் எண்ணத்தில் அந்நாட்டு ராணுவத்தினர் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ராணுவத்தின் தாக்குதலை விடுதலைப்புலிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற சண்டையில் புலிகள் 31 பேரும், ராணுவத்தினர் 5 பேரும் பலியானதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, புலிகளின் கண்ணி வெடியில் சிக்கி ராணுவத்தினர் பலர் படுகாயமடைந்ததாகவும், எனினும், புலிகளின் கடும் எதிர்ப்பை முறியடித்துவிட்டதாகவும் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்ஷே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் கடும் சண்டை நடைபெற்றுவருவதாகவும், இந்த போரில் சிக்கி பலியாகாமல் இருக்க, அப்பகுதியில் உள்ள மக்கள், ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சனி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக