
இந்தியா மேற்கொள்ளும் அழுத்தங்களுக்கு அடிபணிந்து யுத்தநிறுத்தம் ஒன்று ஏற்படும் வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை. புலிகள் ஆயுதங்களை களைந்தால் மட்டுமே யுத்தநிறுத்தம் மேற்கொள்ளப்படும. இதனை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தற்போது அரச படையினரின் முன் நகர்வுகளுக்கு ஈடுகொடுக்க முடியாது பின்வாங்கி வருகிறார் என படைத்தரப்பு தகவல் தெரிவிக்கின்றது. படைநடவடிக்கைகள் உக்கிரமடையும்போது பிரபாகரன் வன்னியை விட்டு வெளியேறக்கூடும். புலிகள் ஆயுதங்களை களையும் வரையில் யுத்தநிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக