செவ்வாய்

புலிகளின் அச்சுறுத்தலையும் மீறி வன்னியைவிட்டு வெளியேறும் தமிழ்மக்கள்!


வன்னிபுலிகளின் அச்சுறுத்தல், மிரட்டல்களுக்கு மத்தியில் தமது உயிரைக்காப்பற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக உயிரை பணயமாக வைத்து ஆபத்தான் கடல் பாதை ஊடாக அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு கடற்பகுதி ஊடாக புல்மோட்டைக்கு சென்று படையினரிடம் முல்லைவாழ் மக்கள் அடைக்கலம் கோரினர்.

அதன் தொடர்ச்சியாக நேற்றையதினம் ப+னகரி கடற்பரபு ஊடாக மண்டைதீவு பகுதிக்கு படகுகள் மூலம் தப்பித்து சென்றுள்ளனர். இவ்வாறு வெளியேறிய பொதுமக்கள் 19பேர் கடுமையான காற்று காரணமாக கடலில் தத்தளித்தபோது கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் குழந்தைகள், 11பேர் பெண்கள், 8பேர் ஆண்கள் ஆவர். இவர்கள் வழங்கியுள்ள தகவலின் பிரகாரம் மேலும் பல பொதுமக்கள் வெளியேற எண்ணியுள்ளபோதும் அவர்களை வெளியேறவிடாமல் முல்லைத்தீவு பகுதிக்கு இடம்பெயருமாறும் புலிகள் வற்புறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

1 கருத்து:

தங்க முகுந்தன் சொன்னது…

சில உண்மைத் தகவல்களை; வெளியாவது வரவேற்கத் தக்கது. தொடரட்டும் உங்கள் பணி! வாழ்த்துக்கள்.