தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் நால்வரின் கூடவே இருந்து பழகி கொலை! புரிந்த மட்டு.குரகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து விடுதலைப் புலிகளின் உளவாளிகள் அங்கிருந்த ஆயதங்கள் மற்றும் முக்கிய உபகரணங்களுடன் தப்பியோட்டம்!!
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் நால்வரின் விபரம் பின்வருமாறு, கலாவதி புஷ்பேந்திரன் (அஜந்தன்) – வாழைச்சேனை, பாக்கியராசா சிறீதரன் (பில்லாளன்) – மயிலம்பாவெளி, கேதாரம் (மணிவண்ணன்) – ஏறாவூர், கந்தய்யா செல்வராசா (தாசன்) – கொம்மாதுறை. இச்சம்பவத்தின் காரணமாக, கிழக்குப் பகுதியில் உள்ள மக்கள் அனைவருமே, கொதிப்பில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்திலும் கண்டனப் பேரணியிலும் முக்கிய தொனிப்பொருளாக “பிரபாகரனும் அவரது சகாக்களும் வடபகுதி மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தும் கோழைச் செயலை நிறுத்தவேண்டும், அம்மக்களை அவர்களின் விருப்பப்படி வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்” என்ற கோஷங்களே முக்கிய இடத்தினைப் பிடித்திருந்தன. அதனையே அங்கு கருணா அம்மானும் மேடையேறி சூடு பறக்கக் கூறியிருந்தார். தமக்கெதிரான ஆர்ப்பாட்ட பேரணிகளில் ஒட்டுமொத்த தமிழினமே திரண்டிருந்ததைக் அவதானித்த பிரபாகரன் தன் சகாக்களைப் பார்த்து போட்ட பெருங் கூக்குரலின் பலனாகவே, ஆர்ப்பாட்ட தினத்தன்று மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமைக் காரியாலய வளாகத்தில் கைக்குண்டு வெடித்துச் சிதறியது.
எனினும், அங்குள்ள பாதுகாப்புப் பலத்தையுணர்ந்த அவரின் போராளிகள் கைக்குண்டைக் கழற்றி வெட்டாந்தரையில் வீசிவிட்டுப் போனது அவர்களின் புத்தி சாமர்த்தியம். தான் போட்ட கூப்பாடுகள் வெட்டாந்தரையில் வெடிக்க வைக்கவாடா என்று பிரபாகரன் திரும்பக் கேட்டதன் பலனே இன்று அதிகாலை, சந்திவெளியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் கிளைக் காரியாலயமொன்றில் நிகழ்த்தப்பட்ட கொலைகள் எனலாம். அதாவது, குறித்த தினம் அக்காரியாலயத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 9 போராளிகளில் ஐவர் மிக அண்மையில் இணைந்து கொண்ட புதிய உறுப்பினர்களாவர். இவர்கள் ஐவரின் குடும்பத்தினரையும் கொல்லப்போவதாக பயமுறுத்தி இவ் ஐவரையும் தம் வசப்படுத்திக் கொண்ட புலிகள், அவர்களுக்கு பல்வேறு மயக்கு வார்த்தைகளையும் ஊட்டி மேற்படி நஞ்சூட்டும் திட்டத்தையும் வகுத்துக் கொடுத்துள்ளனர். அதன்படி தருணம் பார்த்துக் காத்திருந்த இவர்களில் ஒருவர் நள்ளிரவில் தேனீர் தயாரித்துள்ளார். அத்தேனீரில் நஞ்சு கலந்து ஏனைய நான்கு உறுப்பினர்களுக்கும் கொடுத்துள்ளார். இதனை உட்கொண்ட நான்கு உறுப்பினர்களும் உணர்விழந்து விழுந்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் காரியாலயத்தில் இருந்த ஆவணங்களையும், குறித்த சில தகவுகளையும் அபகரித்துக் கொண்ட இவ் ஐவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முன்னர் புலிகள் சொன்னபடி, உணர்வற்றுக் கிடந்த 4 உறுப்பினர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இப்படிப்பட்ட செயல்களைச் செய்வதும், செய்யத் தூண்டுவதும் புலிகளுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. உதாரணமாக 23.09.2004 அன்றும் இப்படியான ஒரு இழிவுக் காரியத்தை நிறைவேற்றியிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக