

நாடாளுமன்ற திண்ணை மீது, அண்ணா தி மு க அம்மாவுக்கு ஆசை என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அணு ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளதற்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பதவியில் இருப்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஏதோ ஒன்றை கூறி அவர்கள் எல்லாம் பதவி விலகிவிட வேண்டும். ஊழல்கள் பல புரிந்த இவர் பதவியிலே வந்து அமர்ந்து கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார்.
திண்ணை காலியாகுமா என்று தினமும் இங்கே கூச்சலிட்டுக் கொண்டிருந்தவர் இப்போது பிரதமர் அளவிற்கு கூச்சலிட முன்னேறியிருக்கிறார்.
இவர் தோழமை கொள்ள முயன்ற பாஜக மட்டும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரானதா? இல்லை, கம்யூனிஸ்டுகளுக்கு இந்த அறிக்கை மூலம் தூண்டில் போட முனைகிறாரா? இன்னும் ஓராண்டில் தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில்தான் ஜெயலலிதா, பிரதமரை பதவி விலக வேண்டுமென்று அறிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக